நெஞ்சுக்குள் வாழும் இதயமே
நீதானே என்தன் சொந்தம்- அம்மா

பற்றும் பாசமும் கொண்ட உன்னை
சித்தம் இனித்திட நித்தம் நினைத்திடுவோம்

கனிவோடு எமை காக்கும் அன்னை நீயம்மா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எமக்குரைத்த தாயம்மா

நீ இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழவிடு
நான் என்ற அகந்தை விடு நாம் என்று மாறி விடு

கேள்வி தான் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்தென்று
ஏன் எதற்கு எப்படி ...!யார் யாருக்கு எப்போது...!
கேட்டுவிடு உன்னிடமே பார் போற்ற வாழ்ந்திடுவாய்
என்ருரைத்த தாயே உன்பாதம் போற்றி போற்றி!

யாரிந்த மக(ன்/ள்) என்று உலகு கேட்கும் அளவிற்கு
எம்மை உருவாக்கிட எம் உழைப்பவசியம்
கற்றறிந்த கல்வி பெற்ற பல அனுபவம் -கொண்டு
நம்மை மெருகூட்டிட உன் கருணை அவசியம்

இந்த ஞாலத்தில் உன்னை விட பெருமை யாருக்கம்மா
எந்த காலத்திலும் பொன்னைவிட பெருமை யாருக்கம்மா

காசிருந்தால் நினைத்ததை வாங்கலாம் இந்த காலத்தில்-ஆனால்
அன்னை உன்னை எது இருந்தாலும் வாங்கமுடியுமா

உன் பெருமை போற்றிட ஏது வார்த்தை அம்மா
எம் பெருமைக்கு வித்திட்ட உன்னை வாழ்த்த
கோடி வார்தை கூட போதாதம்மா....!

0 பின்னூட்டம்(கள்):