தமிழ் எங்கள் மூச்சு உயிர் மூச்சு
வேதம் உயிர் நாதம்
பக்க பலம் நல்ல கல்வி
பெற்ற வரம் கற்ற கரம்
பெரிய வெற்றி அரிய வீரர்
அரிய குணம் தானம் அவதானம்
ஆனால் தமிழா எங்கு ஊனம்
வேண்டா மனம்....!
ஐயம் பயம் பணம் ....!
வேகம் சந்தேகம்!
வாழ்வு உயர நல்ல மனம் ஒன்று போதுமே
என்ன பலன் ஏது பயன் விடுக
பயம் களவு மறைய -சுதந்திர
தாகம் தணிய பாவம் அகல
வறுமை ஒழிய கருணை பொழிய
வரவு உயர பெருமை பெருக
எழுக எழுக எழுக ! தெளிவு பெறுக !
வெற்றி நமதே......! மேன்மை நமதே...!
காலம் தரும் நல்ல வான்பார்த்த பூமி!
அங்கு ஒன்றே குலம்
என்ற பண்பே குணம்
வேறு எங்கே இந்த மரபு
பாரில் வேறு எங்கே இந்த உறவு
அம்மா அப்பா பிள்ளை மாப்பு உறவு
யாரும் ஒன்றே இங்கு...!
தலம் சென்று வலம் வந்த பலன் கிட்ட
கடல் ஓரம் வீசும் காற்று சுகம் கிட்ட
மெல்ல வரும் மழலை கீதம் பொழிய
காதல் கானம் கனிவுடன் கேட்க
பாரும் போற்றிப் புகழ
வாழ்வே வளம் பெறும்
இதுவே நமது உறுதி நியதி
இன்றே வருக நன்றே செய்க
முடிவு நம் கையில் -நமது
விடிவும் நம் கையில்
ஆசைக் கனவு தமிழ் விடுதலை..........!
நீண்ட கனவு!
இனிய தமிழ்!
வாழிய தமிழ்!
வளர்க புகழ் !
அணிக தங்கச்சரம்......!
வாரீர் வாரீர் வாரீர் .......!
எழுந்து வாரீர்


சுகமானது எதுவென்று
நிலவிடம் கேட்டேன் - ஒளிந்து கொண்டது.
காற்றிடம் கேட்டேன் - வருடிச் சென்றது.
இதயத்திடம் கேட்டேன் - பிரிவு என்றது.
ஏனெனில்
பிரிவில் தான்
உன் நினைவுகள் மீட்கப்படுகின்றன.

மானத்தமிழா சற்று சிந்தித்துபார் ...!
நீ என்ன கல்லாதவனா?
கல்
எதற்கு அடிக்கவா ? இல்லை
கட்டவா ? இல்லை அடிமை விலங்கை உடைக்க
எத்தனை துன்பம் எத்தனை தொல்லை
ஏன் நமக்கு மட்டும் அமைதி வழியில்
பயணம் நடு வழியில் கரணம் ஏன் ?
பாதகர் கூட்டம் நிறைய உலவும் உலகம் இது -நம்மை
பேதையர் ஆக மாற்ற முயலும் கபடம்....!
ஆறா வடு சொல்லால் சுட்ட வடு பிறரை வையாதே
தேன் மதுர தமிழுக்கு நிந்தனை
ஆஹா எத்தனை அழகு நம்ம தமிழ் மொழிக்கு
அத்தனையும் நம்ம வாயில் கொஞ்சினால்
தமிழ் அன்னையே நகும்

உனக்கு நானோ எனக்கு நீயோ சுமையாகிப் போகாமல்
துணையாகிப் போவோம் வா !

தேவைதானா என்று கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா ?
குரங்கிலிருந்து மனிதன் குதித்திருக்க முடியுமா ?
தூரத்தைநெருங்கியிருக்க முடியுமா ?
நேரத்தைசுருக்கியிருக்க முடியுமா ?
தேவை தான்முட்டைக்குள் இருக்கும் உயிரை மூச்சு விடவைக்கிறது
அனுபவங்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை
நம் வாழ்க்கை முறை தீர்மானிக்கப்பட்ட அனுபவங்களையே
நம்மீது திணித்தது
யாருக்கோ நேர்ந்த அனுபவங்களை ஒப்புக் கொள்ளுமாறு
நம்மீது துப்பியது
ஆகவே தாத்தாக்களின் நகல்களாகவே
தமிழன் தயாரிக்கப்பட்டான்
சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சியில்லை

வைரமுத்து

SOFTWARE ENGINEER LIFE!

நண்பர்கள் மறப்பாய். .
உணவு குறைப்பாய். .
தூக்கம் தொலைப்பாய். .
கண்ணாடி அணிவாய். .
இமெயிலில் வாழ்வாய். .
தாய்மொழி மறப்பாய். .
புத்தகக் கடையில் version கேட்ப்பாய். .
கனவிலும் logic பேசுவாய். .
கணிப்பொரியய் பாடல்களால் நிரப்புவாய். .
பின்னிரவில் தொலைக்காட்சி ரசிப்பய். .
அவ்வப்போது அபூர்வமாய் சிரிப்பாய். .
நேரத்தைவிட வேகமாகிப்போகும்
வாழ்க்கையை விட்டு வெளியே
வரத்தெரியாமல்
கணிப்பொறிக்குள்
சிக்கி தொலைந்துபோவாய்!


//
வலைப்பதிவுக்கு புதியவள் என்பதால், பதிவுகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் பின்னூட்டல் மூலம் அறியத்தரவும்
நன்றி//

- முடிந்து போன துவக்கங்கள் -

கடந்த காலத்தில்தோல்விகள் பல,
நல்லவேளை வெல்லவில்லை
என்றுசொல்ல வைக்கின்றன.

கிடைக்காத நுழைவுத் தேர்வு ஒன்று

என் எதிர்காலத்தை வெளிச்சப்படுத்தியிருக்கிறது.

கிடைக்காதவேலை ஒன்று தந்திருக்கிறது

கிடைத்தற்கரிய வேலையை.

துரோகமிழைத்த நண்பன் கற்றுத் தந்திருக்கிறான்

தாங்கும் வலிமையை.

ஏமாற்றிய நண்பன்பெற்றுத் தந்திருக்கிறான்

ஏமாறாத மனதை.

தோற்றுப் போன காதல் பரிசளித்திருக்கிறது

அன்பான மனைவியையும்அழகான குழந்தையையும்.

ஒவ்வோர் தோல்விக்கும் பின்னும்

கடவுள் இருக்கிறார்.
கவனித்துக் கொண்டே


இவை யாவும் என்னுடையவை அல்ல இணையத்தில் சுட்டவை :))

நெஞ்சுக்குள் வாழும் இதயமே
நீதானே என்தன் சொந்தம்- அம்மா

பற்றும் பாசமும் கொண்ட உன்னை
சித்தம் இனித்திட நித்தம் நினைத்திடுவோம்

கனிவோடு எமை காக்கும் அன்னை நீயம்மா
கடமை கண்ணியம் கட்டுப்பாடு எமக்குரைத்த தாயம்மா

நீ இன்று வாழ்ந்துவிடு பிறரையும் வாழவிடு
நான் என்ற அகந்தை விடு நாம் என்று மாறி விடு

கேள்வி தான் வாழ்க்கையில் வெற்றிக்கு வித்தென்று
ஏன் எதற்கு எப்படி ...!யார் யாருக்கு எப்போது...!
கேட்டுவிடு உன்னிடமே பார் போற்ற வாழ்ந்திடுவாய்
என்ருரைத்த தாயே உன்பாதம் போற்றி போற்றி!

யாரிந்த மக(ன்/ள்) என்று உலகு கேட்கும் அளவிற்கு
எம்மை உருவாக்கிட எம் உழைப்பவசியம்
கற்றறிந்த கல்வி பெற்ற பல அனுபவம் -கொண்டு
நம்மை மெருகூட்டிட உன் கருணை அவசியம்

இந்த ஞாலத்தில் உன்னை விட பெருமை யாருக்கம்மா
எந்த காலத்திலும் பொன்னைவிட பெருமை யாருக்கம்மா

காசிருந்தால் நினைத்ததை வாங்கலாம் இந்த காலத்தில்-ஆனால்
அன்னை உன்னை எது இருந்தாலும் வாங்கமுடியுமா

உன் பெருமை போற்றிட ஏது வார்த்தை அம்மா
எம் பெருமைக்கு வித்திட்ட உன்னை வாழ்த்த
கோடி வார்தை கூட போதாதம்மா....!

உன் மெளனத்தை
மொழிபெயர்க்க-நான்
சேமித்து வைத்துள்
இரவுகளைத் திருடுகின்றன
உனது நினைவுகள்


மீண்டும் காலையில்
உன் மெளனத்தில்
கயிறு திரிக்கும்
என் எண்ணங்கள்


பேசுகின்ற
உன் கொலுசுச் சத்ததிலேயே
உனக்கான உலாவுக்காகப்
புறப்பட்டுவிட்டது என் மன ரதம்


நீ பேசிக்கொள்ளாத
வார்த்தைச் சமுத்திரத்தில்
மெளன முத்துக்களைக்
கண்டெடுத்து வைத்துள்ளேன்!


உன் உதட்டு மொட்டுக்களின்
பூத்தலுக்காக
காத்துக்கிடக்கும் மனவண்டு…


என் ஞாபகப் புரவி
பார்க்குமிடமெல்லாம்
பரந்து கிடக்கிறது உன்
மெளனப் புல்வெளி



பூமியில் இருந்து பார்கையில்
அழகாகத் தெரியும் அதே நிலவு தான்
கிட்டப்போய்ப் பார்த்தால் கரடுமுரடய்
கிடக்கிறது என்கிறது...
விஞ்ஞானம்...!
விஞ்ஞானம் சொன்ன...அதே
நிலவைத்தான்
சற்கரை நிலவு
தங்கநிலவு
வெள்ளிநிலவு
வட்டநிலவு
வண்ணநிலவு என்கிறது... கவிதை...!