நிலா
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை...

பூக்கள்
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை...

மழையில் நனைவதால்
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை...

மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை...

நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..

உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..!

தினமும்
புதிய காலைகளை
எதிர் கொள்ளவேண்டியிருக்கிறது
பழைய நினைவுகளுடன்..

இன்றைக்கும் மழை
உன்னிடம்
என் பிரியத்தை சொன்ன அன்றைக்கு
பொழிந்ததைப்போலவே பொழிகிறது.
மழையிடம் மாறுதல்கள் கிடையாது..

இலையின் முதுகில்
ஒழிந்திருக்கும்
பனித்துளியைப்போலப்
பதுங்கிக் கிடக்கிறது
என் துயரம்
சூரியனால் எடுத்துச்செல்ல முடியாதபடி..


இன்றைய மழை நாட்களில் ஒறு நிஜம்.
சிறு கற்பனைகளுடன் இனிமையானது.