SOFTWARE ENGINEER LIFE!

நண்பர்கள் மறப்பாய். .
உணவு குறைப்பாய். .
தூக்கம் தொலைப்பாய். .
கண்ணாடி அணிவாய். .
இமெயிலில் வாழ்வாய். .
தாய்மொழி மறப்பாய். .
புத்தகக் கடையில் version கேட்ப்பாய். .
கனவிலும் logic பேசுவாய். .
கணிப்பொரியய் பாடல்களால் நிரப்புவாய். .
பின்னிரவில் தொலைக்காட்சி ரசிப்பய். .
அவ்வப்போது அபூர்வமாய் சிரிப்பாய். .
நேரத்தைவிட வேகமாகிப்போகும்
வாழ்க்கையை விட்டு வெளியே
வரத்தெரியாமல்
கணிப்பொறிக்குள்
சிக்கி தொலைந்துபோவாய்!


//
வலைப்பதிவுக்கு புதியவள் என்பதால், பதிவுகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் பின்னூட்டல் மூலம் அறியத்தரவும்
நன்றி//

18 பின்னூட்டம்(கள்):

எழுத்துப்பிழைகளை குறைத்து இன்னும் எழுதுங்கள்

நன்றி

வருக வருக

நல்ல கவிதை.....
நீங்களும் ஒரு Software Engineer ஒ!!

பதிவுலகத்திற்குள் அடி எடுத்து வைத்திற்க்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!!!

வாழ்த்துக்கள்.

தமிழ் வலையுலகத்துக்கு நல்வருகை..
கவித நல்லாதேன் இருக்கு..ஆனாக்கா.. அந்த பூங்கொடிய கவிதமேலேயிருந்து மாற்றி வைக்கலாமே..
எழுத்தே தெரியல.. பூவோட கலர் மட்டுந்தேன் கண்ண பறிக்குது..

அப்புறம் எழுத்துப்பிழையப் பத்தி கவலப்படாதிங்க..போகப் போக..தானா சரியாகும்.எனக்கு கூட புதுசா தட்டச்சு செய்யறதால,தெரிஞ்சே தப்பு வருது..ஆனாக்கா.நா..அத திருத்த நேரம் செலவு செய்யரதில்ல..

Anonymous!
பின்னூட்டலுக்கு நன்றி.
என்ன எழுத்துப் பிழை என்று விளங்கவில்லை. அடுத்து எழுதும் போது திருத்திக் கொள்கின்றேன்.

நன்றி அருள் அண்ணா!
நானும் Software Engineering கற்றுக் கொண்டு இருக்கின்றேன்.

நன்றி கீதா

பின்னூட்டலுக்கு நன்றி அண்ணா
பூங்கொடியை மாற்றியாச்சு.

என்னுடைய வாழ்க்கையை கவிதையாக எழுதிவிட்டீர்கள், வாழ்த்துக்கள்.

இன்னமும் சில வரிகள் சேர்க்கலாம்

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பார்ட்டி. அங்கேயும் கோடிங் டெஸ்டிங் பற்றிய விவாதம்.
அடுத்த வேலை டாட் நெட்டிலா ? ஜாவாவிலா என மனதுக்குள் குழப்பம்.

//என்ன எழுத்துப் பிழை என்று விளங்கவில்லை//

கணிப்பொரியய்

பொய் சொன்ன வாய்க்குப் பொரியும் கிடையாது..

;) சும்மா அம்மணி..

அப்பிடியே சொந்தச் சரக்கையும் எடுத்து விடுறது தானே...

இப்ப நல்லாயிருக்கும்மா.. இன்னும் இது போல நெறய எழுத வாழ்த்துக்கள்.என்னோட வீட்டுக்கும் அடிக்கடி வந்துட்டுப்போயேன்..நன்றி..

ரொம்ப ஸ்டேண்டர்டான கவிதை! பின்ன என்னத்த சொல்ல , கணிப்பொறியாளர்கள் தான் அதிகம் திங்குறதே என்ன சாப்பாட்டு வேளைனு ஒரு நேரம் வைத்து தின்ன மாட்டார்கள்!

ஒரு சராசரி இந்தியனை விட அதிக கலோரிகள் முழுங்குகிறார்கள்!

அதை விட அபூர்வமாக சிரிக்கிறார்கள் என்பது எப்படி என்பது தான் தெரியவில்லை. சத்தியம் தியேட்டரில் போய் அமைதியாக படம் பார்க்கலாம் என்றால் சல சலவென்று பேசிக்கொண்டு சம்பந்தமே இல்லாமல் சத்தமாக சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள் மென்பொறியாளர்கள், ஒரு வேளை பக்கத்தில் ஒரு பொண்ணு இருந்தால் அப்படி செய்வார்கள் போல(வீட்டில சிரிக்காம உம்முனுனு இருப்பாங்க போல)

நல்லாருக்கு கவிதை.....

நிச்சயமாக ஆமோதிக்கிறேன்.software engineers வாழ்க்கை இப்படித்தான் போகிறது.

அருமையான ஒரு கவிதை

அருமையான ஒரு கவிதை

அருமையான ஒரு கவிதை

மனதோடு மழைச்சாரல்...........மனதைக் கவருகின்ற மழைச்சாரல்
"பெற்ற தாயும் பெற்ற பொன்னாடும் உன்னைப் பெற்றதினாற் பெருமையடையட்டும்"