சுகமானது எதுவென்று
நிலவிடம் கேட்டேன் - ஒளிந்து கொண்டது.
காற்றிடம் கேட்டேன் - வருடிச் சென்றது.
இதயத்திடம் கேட்டேன் - பிரிவு என்றது.
ஏனெனில்
பிரிவில் தான்
உன் நினைவுகள் மீட்கப்படுகின்றன.

மானத்தமிழா சற்று சிந்தித்துபார் ...!
நீ என்ன கல்லாதவனா?
கல்
எதற்கு அடிக்கவா ? இல்லை
கட்டவா ? இல்லை அடிமை விலங்கை உடைக்க
எத்தனை துன்பம் எத்தனை தொல்லை
ஏன் நமக்கு மட்டும் அமைதி வழியில்
பயணம் நடு வழியில் கரணம் ஏன் ?
பாதகர் கூட்டம் நிறைய உலவும் உலகம் இது -நம்மை
பேதையர் ஆக மாற்ற முயலும் கபடம்....!
ஆறா வடு சொல்லால் சுட்ட வடு பிறரை வையாதே
தேன் மதுர தமிழுக்கு நிந்தனை
ஆஹா எத்தனை அழகு நம்ம தமிழ் மொழிக்கு
அத்தனையும் நம்ம வாயில் கொஞ்சினால்
தமிழ் அன்னையே நகும்