நிலா
தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை...
பூக்கள்
உதிர்வதால் செடிகள்
புலம்புவதுமில்லை...
மழையில் நனைவதால்
மரங்கள் குடை
பிடிப்பதுவுமில்லை...
மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை...
நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின்
வேரறுப்பதுமில்லை..
உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை
வீசுவதுவுமில்லை..!
பகிர்ந்தது
♥ தயா பாலா ♥
3 பின்னூட்டம்(கள்):
nallajirukku
பூச்சரம் வெள்ளி மலர்..
இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..
""மதங்கள்
வேறுபடுவதால் மனிதம்
மாறுவதுமில்லை... ""
great lines
Post a Comment